திருமங்கலம், ஏப். 12: திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த கணவனை இழந்த 85 வயது மூதாட்டி தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மூதாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது சுமர் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் மூதாட்டியின் வீடு புகுந்து அவரை பலாத்காரம் செய்து விட்wடு சென்று விட்டார். இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவருகின்றனர்.